×

சேந்தமங்கலம் அருகே ₹1.60 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் கட்டும் பணி

சேந்தமங்கலம், பிப்.4:  சேந்தமங்கலம் அடுத்துள்ள காந்திபுரம், கொல்லிமலை சாலை பொம்மசமுத்திரம் ஏரிக்கரையில் நெடுஞ்சாலை துறை சார்பில் ₹1.60 கோடி மதிப்பில் தடுப்பு சுவர் கட்டுவதற்கான பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.
நெடுஞ்சாலை கோட்ட உதவி பொறியாளர் செல்வராஜன் தலைமை தாங்கினார். சேந்தமங்கலம் எம்எல்ஏ சந்திரசேகரன் கலந்து கொண்டு திட்டப்பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில், நகர செயலாளர் ராஜேந்திரன், முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் ரமேஷ், ஒன்றிய துணை செயலாளர் வீரப்பன், நிர்வாகிகள் வெண்ணிலா செந்தில், கென்னடி, ஆறுமுகம், வக்கீல் சசிக்குமார், ஸ்டாரா செந்தில், சின்னுசாமி, ஒப்பந்தகாரர் ஆஞ்சநேயா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Senthamangalam ,
× RELATED சேந்தமங்கலம் நீதிபதி இடமாற்றம்